சிவசைலம் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்பு விழா;-

தென்காசி தெற்கு திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் திறந்து வைத்தார்:-

தென்காசி மாவட்டம்
கடையம் ஊராட்சி ஒன்றியம், சிவசைலம் ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டிடம் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா . தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆ.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

ஒன்றிய கவுன்சிலர் ஜகாங்கீர் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் மலர்மதி சங்கரபாண்டியன் வரவேற்றார்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

அதனையெடுத்து கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் குத்துவிளக்கேற்றி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜெ.கே.ரமேஷ், தொண்டரணி அமைப்பாளர் இசக்கி பாண்டியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவகுமார், சாம்பவர்வடகரை மாறன், யூனியன் துணை சேர்மன் கனகராஜ் முத்துபாண்டியன், சுதன், பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி யாகூப் பெருமாள், ஜன்னத், சதாம், தர்மபுரம் பஞ்சாயத்து தலைவர் சதாம்,
ஒன்றிய கவுன்சிலர்கள் புஷ்பராணி, சுந்தரி மாரியப்பன் மற்றும் வின்சென்ட் பால், டோனி சாமி, ஆரோக்கியராஜ், சசிகுமார் ரவீந்திரன் எல் அண்ட் டி முருகன், மோகன், சுப்பையா, இப்ராஹிம், சதாம் உசேன், சுரேஷ், அர்ஜீனன், மகேஷ் பாண்டியன், மகேந்திரன், பிரவீன் குமார், பேரூர் செயலாளர் அழகேசன், பாண்டியன், கடையம்பெரும்பத்து பரமசிவன், முல்லையப்பன், வின்சென்ட், சேட்டு காதர், அஜித்குமார் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்
முடிவில் சங்கர பாண்டியன் நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *