திண்டுக்கல் மாவட்டம் பழனி திராவிடர் விடுதலைக் கழகத்தை சேர்ந்த மாவட்ட அமைப்பாளர் மருதமூர்த்தி தலைமையில் 10க்கும் மேற்பட்ட தோழர்கள் ஒன்றாக இணைந்து கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தந்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இயக்க கொடிகளை ஏந்தியவாறு ஆளுநரே திரும்பிச் செல்

தொடர்ந்து சனாதனத்துக்கு ஆதரவாகவும் தமிழக அரசுக்கு எதிராகவும் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் தமிழக ஆளுநரே திரும்பிச் செல்ல வேண்டும் என்ற முழக்கத்தை கோஷமாக எழுப்பி தங்களை எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து உகாந்தா நகர் பகுதியில் கோஷம் எழுப்பியவாறு போராட்டம் செய்ய முயன்ற நிலையில்

கொடைக்கானல் காவல்துறையினரால் அனைவரும் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றி பழனி கொண்டுவரப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்..

தொடர்ந்து இந்நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மார்கிம் காக்கி
நகர அமைப்பாளர் பெரியார்,
ஒன்றிய அமைப்பாளர் நாச்சிமுத்து மாணவரணி ஆயுதன், ஊடக மையம் ஜெய்சங்கர்,மற்றும் ராஜா,
ஒட்டன்சத்திரம் தொகுதி அமைப்பாளர் கபாலி உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடிகாட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *