அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.

மதுராந்தகம்
செங்கல்பட்டு மாவட்டம்அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2000-ம் ஆண்டு படித்த மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது.

அச்சிறுப்பாக்கம் மார்வார்அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2000-ம் ஆண்டு படித்த மாணவ மாணவியர் சந்தித்துக் கொண்டனர். அப்போது முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் பள்ளிக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

மேலும் மாணவ மாணவியர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு தங்களின் குழந்தைகளை நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து அவரவருக்குரிய கலாச்சார முறையில் சந்தித்து நெகிழ்ச்சி ஏற்படுத்தினர். இதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர் விஜயகுமார் அவர்களுக்கு சால்வை அணிவித்து 2000-ம் ஆண்டு பயின்ற மாணவர்கள் நினைவுப் பரிசு வழங்கினர்.

மேலும் இதுபோன்ற சந்திப்புகள் ஆண்டுதோறும் நடைபெற வேண்டும் என்று இச்சந்திப்பு மூலமாக வறுமையில் உள்ள தங்களது நண்பர்களுக்கு அனைத்து மாணவ மாணவியரும் சேர்ந்து அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற உறுதிமொழியுடன் 2000-ம் ஆண்டு மாணவர்கள் மலரும் நினைவுகளில் தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *