ஜெயங்கொண்டம் அருகே குடியிருப்பு பகுதியில் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுத நகரில் அமைந்துள்ள முரளி நகரில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன இந்தப் பகுதியில் பெய்த மழையினால் மழைநீர் மற்றும் சாக்கடை நீர் வெளியேறாமல் தேங்கி துர்நாற்றம் வீசுவதாகவும் நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அந்தப் பகுதி பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்தின் மீது குற்றம் சாட்டி வருகின்றனர்

மக்களின் குற்றச்சாட்டினை ஏற்று அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது முன்னாள் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கே கே சின்னப்பன் அவர்களிடம் வீட்டு மனை பெற்று நகராட்சியின் அங்கீகரிக்கப்பட்ட சாலை மின் வசதி குடிநீர் வசதி அனைத்தும் பெறப்பட்டு சுமார் 15 ஆண்டுகளாக அந்தப் பகுதி மக்கள் குடியிருந்து வருவதாகவும் தற்போது தற்போது அந்தப் பகுதியில் உள்ள விளை நிலங்களை வீட்டு மனைகள் ஆக்கி அதில் புதிய சாலைகள் அமைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மக்களின் புழக்கத்தில் இருந்தது வந்த சாலையை ஒரு தரப்பினர் குறுக்கே தடுத்து சுவர் வைத்து அடைத்ததாகவும் மற்றொரு தரப்பினர் குடியிருப்பு பகுதியில் இருந்து செல்லும் மழை நீர் மற்றும் கழிவு நீரை குறுக்கே கரை அமைத்து தடுத்து விட்டதாகவும் அதனால் அந்த பகுதியில் கழிவு நீரும் மழை நீரும் தேங்கி நிற்கின்றன அதனால் அப்பகுதியில் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர்

இது சம்பந்தமாக பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு தீர்வும் எட்டப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *