தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் 47-வது பிறந்த நாளை முன்னிட்டு ஆலங்குளம் ஒன்றிய சேர்மன் எம். திவ்யா மணிகண்டன் தலைமையில் – 47 மரக்கன்றுகள் நட்டு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வில் ஒன்றிய துணை சேர்மன் செல்வக் கொடி ராஜாமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன், திலகராஜ், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் முரளிராஜா, அந்தோணிச்சாமி, கிருஷ்ணம்மாள் வெங்கடேஷ், மலர்கொடி கோட்டைச்சாமி, சண்முகராம் முருகேஸ்வரி பாலகுமார், கிருஷ்ணவேணி மகேந்திரன், பசுபதி தேவி திராவிடமணி, மீனா சந்தன சுப்பிரமணியன், பால்த்துரை, வள்ளியம்மாள் முருகேசன், முத்துமாரி ரமேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை தொழில் அதிபர் மணிகண்டன் செய்திருந்தார்