தென்காசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர்களின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தென்காசி மாவட்ட தலைவர் டீ கே பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
ஒருங்கிணைப்பாளர் வேலுச்சாமி, துணை தலைவர் அன்பு ராணி, பொதுச் செயலாளர் வீரபாண்டியன், பொருளாளர் ராஜ்குமார், தென்காசி ஒன்றிய கூட்டமைப்பு தலைவர் சத்யராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டி.என்.பாஸ் முறையை மாற்றி மீண்டும் பி.எப்.எம்.எஸ் முறையை செயல்படுத்த வேண்டும். பசுமை வீடு திட்டம் கலைஞர் பெயரில் வழங்க வேண்டும், ஊராட்சிக்கு தேவையான தளவாடப் பொருட்களை தலைவரே கொள்முதல் செய்ய அதிகாரம் வழங்க வேண்டும், பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும், கேரளா, கர்நாடகா,
ஆந்திராவைப் போல் ஊராட்சி மன்ற தலைவருக்கு ரூபாய் 30,000 சம்பளம் வழங்க வேண்டும், சுய உதவிக் குழு மற்றும் வாழ்ந்து காட்டுவோம் போன்ற திட்டங்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கண்காணிப்பில் நடைபெற வேண்டும்,
ஊராட்சியில் உள்ள காலியிடங்களை ஊராட்சி செயலர் ஆப்ரேட்டர் துப்புரவு தொழிலாளர்களை தலைவர்களை நியமிக்க அதிகாரம் வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பு தலைவர்கள் நீதி ராஜன், வேல்சாமி, பாண்டியராஜன்,
குரு சண்முகப்பிரியா, கணேசன், மாரியப்பன், பூமிநாத், முகமது உசேன், முத்துலட்சுமி ராமதுரை, சந்திரசேகர் முத்துப்பாண்டியன் தினேஷ் குமார் செய்தி தொடர்பாளர் சிவா ஆனந்த், விசுவாசம் ராஜேந்திரன் அழகு துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.