தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் துரை, இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பெற்றுக் கொண்டார்.

கீழ் தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் மூலம் 09-பயனாளிகளுக்கு ‘தலா ரூ.8.500/- வீதம் என மொத்தம் ரூ.76,500/- மதிப்பிலான சக்கர நாற்காலிகளையும், படைவீரர் கொடிநாள் 2020 ஐ முன்னிட்டு அதிக வசூல் புரிந்த 3- அரசு அலுவலர்களுக்கு 30 கிராம் வெள்ளி பதக்கத்துடன் கூடிய பாராட்டு சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.துரை. இரவிச்சந்திரன் வழங்கினார்.

மேலும் இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என 320 மொத்தம் மனுக்கள் பெறப்பட்டது.

பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

மாவட்ட இக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, உதவி ஆணையர் (கலால்) ராஜமனோகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கரநாராயணன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முருகானந்தம், மாவட்ட மேலாளர் (தாட்கோ) ரமேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், செய்திமக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *