மதுரை வேளாண்மை கல்லூரி மாணவிகள் கூடலூர் விவசாயிகளுக்கு புண்ணாக்கு பொறி செயல்முறை விளக்கம் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நான்காம் ஆண்டு மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் கம்பம் வட்டாரத்தில் தங்கி விவசாயிகளுக்கு செயல்முறை பயிற்சி அளித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக மாணவிகள் கூடலூர் பகுதி விவசாயிகளுக்கு தென்னையில் ஏற்படும் காண்டாமிருக வண்டு தாக்குதலில் இருந்து பாதுகாக்க புண்ணாக்கு பொறி குறித்த செயல்முறை விளக்கம் அளித்தனர் இதனால் இப்பகுதி விவசாயிகள் பெரிதும் பயன்பெற்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *