தென்காசியில் தமிழ்நாடு கொசுப்பு ஒழிப்பு மஸ்தூர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள்முறையீடு போராட்டம் நடைபெற்றது

தென்காசியில்
தமிழ்நாடு கொசுப்புழு ஒழிப்பு மஸ்தூர்கள் தென்காசி மாவட்ட சங்கம் சர்பில் 9. அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு தென்காசி மாவட்ட தலைவர் முருகையா தலைமையில் பெருந்திரள் முறையீடு நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் கொசுப்பு ஒழிப்பு மஸ்து பணியாளர் களுக்கு பிரதி மாதம் 5-ம் தேதி ஊதிய வழங்க வேண்டும், கொசுப்புழு மருத்துவ பணியாளர்களுக்கு வருடம் முழுவதும் பணி வழங்க வேண்டும் ,மஸ்தூர் பணியாளர்களுக்கு பணி அடையாள அட்டை வழங்க வேண்டும், கொசு புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு தேர்தல் அறிக்கை -317 ன் படி வரன்முறை ஊதியம் மற்றும் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்,கொசுப்பு ஒழிப்பு மருத்துவ பணியாளர்களின் பணியின் போது ஏற்படும் விபத்து மற்றும் மரணத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,

கொரேனா காலத்தில் பணி செய்த கொசு புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு மற்றும் முன் களப்பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்,

கொசுப்புழு ஒழிப்பு மஸ்தூர் பணியாளர்கள் பணி நியமனத்தில் பணிமூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும்,

கொசுப்புழு ஒழிப்பு மஸ்தூர் பணியாளர்கள் நியமனத்தில் அரசியல் தலையீடு இல்லா பணி நியமனம் செய்ய வேண்டும்,

மஸ்தூர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நிர்ணயிக்கும் ஊதியத்தை சீராக அனைத்து ஊராட்சிகளில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,

உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு நடைப்பெற்றது.

மாநில ஒங்கிணைப்பு குழு உறுப்பினர்
வேல்மயில் விளக்க உரையாற்றினார்

தமிழ் நாடு பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கம்
மாவட்ட தலைவர் மாரியப்பன்,

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர்
கோவில்பிச்சை,சி.பி எஸ் ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப் புக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்கள்தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கம் மாநில தலைவர் கங்காதரன்,
நிறைவுரை வழங்கினார்.

இந்நிகழ்வில் பல்வேறு ஒன்றிய பகுதிகளிலிருந்து கொசுப்புழு ஒழிப்பு மஸ்தூர் பணியாளர்கள் ஏராளமனோர் கலந்துகொண்டனர் முடிவில் தமிழ்நாடு கொசுப்புழு மஸ்தூர் சங்க மாவட்ட செயலாளர் மகாலட்சுமி நன்றியுரை வழங்கினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *