மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நீட் தேர்வுக்கு எதிராக நீட்டை ஒழிப்போம் மாணவர்களை காப்போம் என்ற வாசகத்துடன் மாணவிகளிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், தொடங்கி வைத்தார். இதில் திமுக பொதுக்குழு உறுப்பினர் சரந்தாங்கி முத்தையன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சந்தன கருப்பு, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் வாவிடமருதூர் கார்த்திகேயன், பிரதாப், மாணவரணி அமைப்பாளர் யோகேஷ், நகர இளைஞரணி வெங்கடேஷ், வாசன், பொறியாளர் அணி ராகுல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..