ஆலங்குளத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 30-வது நினைவு தினத்தை முன்னிட்டு மெளன ஊர்வலம்

தென்காசி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைந்து 30 நாட்கள் ஆனதையொட்டி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தொடக்கமாக ஆலங்குளம் தையல்நாயகி காய்கறி மார்க்கெட்டில் இருந்து மாவட்ட செயலாளர் பழனிசங்கர் தலைமையில் அக்கட்சியினர் கருப்பு பேட்ஜ் அணிந்து பஸ் நிலையம் வரை மௌனமாக ஊர்வலம் வந்தனர்

இந் நிகழ்ச்சியில் காங்கிரஸ் நகர தலைவர் வில்லியம் தாமஸ், அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் பாண்டியராஜ்,நகர துணை செயலாளர் சாலமோன்
ராஜாபுலவர் சிவஞானம்,பி.ஜே.பி கட்சி நிர்வாகி, அன்புராஜ், காங்கிரஸ் நிர்வாகி அருணாச்சலம் ,
திராவிட கழகம்குமார், தேமுதிகமாவட்டத் துணை தலைவர் அப்பாஸ் , மற்றும் மகளிர் அணி, தொண்டர் அணி, இளைஞரணி, கேப்டன் மன்றம் ஒன்றிய நிர்வாகிகள் பேரூர் கழக நிர்வாகிகள் கிளைக் கழகச் செயலாளர்கள்மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள்,
வியாபாரிகள் பலர் கலந்து கலந்து கொண்டு கேப்டனுக்கு திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

அதனை தொடர்ந்து பஸ் நிலையம் அருகில் பொதுமக்களுக்கு அன்னதானம் நடைப்பெற்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *