சகாதேவன் கிருஷ்ணகிரி செய்தியாளர்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 333 ஊராட்சிகளில் சிறந்த ஊராட்சி செயலாளராக ஜெகதேவி ஊராட்சி செயலாளர் தி.செங்கதிர் செல்வனுக்கு பாராட்டி சான்றிதழ்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஊராட்சிஒன்றியம் ஜெகதேவி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வரும். தி. செங்கதிர் செல்வன் இவர் ஜெகதேவி ஊராட்சியில் உள்ள பொதுமக்களின் குறைகளை கேட்டு அதற்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து பொதுமக்களின் குறைகளை நிறைவேற்றி வந்துள்ளார். இதனை தொடர்ந்து சமூக சேவையும் செய்துள்ளார்.
இவருடைய சேவையை பாராட்டி , கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மொத்தம் 333 ஊராட்சி உள்ளது இதில் சிறப்பாக பணியாற்றிய ஜெகதேவி ஊராட்சி செயலாளராக தி.செங்கதி செல்வன் தேர்வு செய்யப்பட்டு அதற்கான சான்றுதழை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சி தலைவர் கே.எம்.சரயு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்தில் நடைபெற்ற 75-ஆவது குடியரசு தின விழாவில் சான்றிதழை வழங்கினார்.
கூடுதல் ஆட்சித்தலைவர் வந்தனா கார் உடன் இருந்தார். இதைத் தொடர்ந்து அந்த பகுதி கிராம மக்கள் வாழ்ந்து தெரிவித்தனர்.