பாபநாசம் தாலுக்கா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம்
வட்டாட்சியர் தலைமையில் நடைப்பெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் அய்யம்பேட்டை சரகம் அய்யம்பேட்டை மதகடி பஜாரில் சாலை அமைத்து தரக் கோரி விண்ணப்பம் செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து அய்யம்பேட்டை மதகடி பஜார் வணிக சங்க தலைவர் ஜெயராமன் தலைமையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புடன் இணைந்து அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக சாலை மறியல் போராட்டம் நடைபெறுவதாக தெரிவித்ததை தொடர்ந்து பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டன் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

இரு தரப்பினரும் முடிவினை ஏற்றுக் கொண்டதன் பேரில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் சுமுகமாக நிறைவு பெற்றது.

மேற்படி கூட்டத்தில் மதகடி பஜார் வணிக சங்கத்தினர்கள் நெடுஞ்சாலைத்துறை உதவியாளர், ஒப்பந்ததாரர்கள், தலைமை இடத்து துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *