தேசிய சமூக நல அமைப்பின் மனித உரிமை பிரிவின் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு
பரிசுகள் வழங்கினர்.
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியம்
மேட்டுகொளத்தூர் அரசு நடுநிலைப்பள்ளியில்
ஆண்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இவ்விழாவில் NSWF தேசிய சமூக நல அமைப்பின் மனித உரிமை பிரிவின் செங்கல்பட்டு மாவட்ட குழுவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் அழைப்பு விடுத்தார்.
அந்த அழைப்பினை ஏற்று செங்கல்பட்டு மாவட்ட குழுவின் மாவட்ட தலைவர் மு.வேலு, மாவட்ட துணைச் செயலாளர் வெங்கடகிருஷ்ணன்,ஒன்றிய துணைத் தலைவர் ஏஜாஸ், ஒன்றிய செயலாளர் பிரபாகரன், ஒன்றிய இணைச் செயலாளர் டேவிட், சித்தாமூர் ஒன்றிய தலைவர் ஆறுமுகம், நகர உறுப்பினர் பிரபுராஜ்,
ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
மேலும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கு பதக்கங்கள் பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர்.
விழாவில் கலந்துகொண்ட அனைத்து அமைப்பின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவருக்கும் அமைப்பின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.