நீலகிரி மாவட்டம் மேல் கூடலூர் புகழ்பெற்ற சந்தை கடை மாரியம்மன் மற்றும் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வெகுவிமர்சியாக நடைப்பெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கூணம்பட்டி ஆதீனம் 58 ஆவது இளவரசர் நம்பி இராஜலிங்கம் தத்புருஷ சிவம் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் சாதி மதம் பாரமல் அனைவருக்கும் கோவில் விழா குழு கமிட்டி சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டது.
இதில் அப்பகுதியே சார்ந்த இஸ்லாமிய கிறுஸ்தவ மதத்தினர் வருகை தந்து மத நல்லிணக்கதை பகிர்ந்து கொண்டது அனைவரையும் பூரிப்பில் ஆழ்த்தியது.