மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா மாதிரிவேளூரில் உள்ள முத்துசாமி விஸ்வநாதன் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் செங்கல்பட்டு மாவட்டம் கோவலம் கடற்கரையில் குடியரசு தினம் மற்றும் பாரதியார் தின விளையாட்டு போட்டிகள் பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெற்றது.

சென்னை கோவலம் கடற்கரையில் பிப்ரவரி 7-ம் தேதி முதல் பிப்ரவரி 11-ம் தேதி வரை நடைபெற்ற 14 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் D.விஷ்வா (IX-B), S. ஷாம் (IX-B) ஆகியோரும் பங்கு பெற்று மாநில அளவில் கடற்கரை கையுந்து பந்து போட்டியில் முதலிடம் பிடித்து பள்ளிக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தனர்.

வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர் அவர்களையும் பள்ளி தாளாளர் , தலைமையாசிரியர், இருபால் ஆசிரியர்கள், அலுவலக நண்பர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *