பாபநாசம் அருகே
நல்லூரில் கொடியேற்றத்துடன் தொடங்கிய கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மாசிமக திருவிழா..

ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அருள்மிகு கிரிசுந்தரி அம்பாள் உடனாய அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகள் கொடிமரம் அருகே எழுந்தருள, ஸ்ரீ லய ஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் சார்பாக வேலப்ப தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் வேத பாராயணம் செய்ய, நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க, நந்தியபெருமான் திருவுருவம் வரையப்பட்ட திருக்கொடி ஏற்றி வைக்கப்பட்டு, கொடிமரத்திற்கு எண்ணெய் காப்பு சாற்றி மாப்பொடி, மஞ்சள் பொடி, திரவிய பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் முதலிய பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து பின்னர் சுவாமிகளுக்கும் கொடி மரத்திற்கும் கோபுர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *