திருப்பனந்தாள் அருகே குறிச்சி ஊராட்சியில் தி.மு.க. சார்பில் திண்ணை பிரச்சாரம்.

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் தமிழக அரசின் இரண்டரை ஆண்டு சாதனைகள்
விளக்க இல்லந்தோறும் திண்ணை பிரச்சாரம் திருப்பனந்தாள் அருகே குறிச்சி ஊராட்சியில் நடைப்பெற்றது.

நிகழ்ச்சிக்கு திருப்பனந்தாள் மத்திய ஒன்றிய அவை தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். திருப்பனந்தாள் ஒன்றிய குழு தலைவர் தேவி ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் உதயச்சந்திரன் தின்னை பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது வீடு வீடாகவும், பல்வேறு வணிக கடைகள் சென்று இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் என அரசின் இரண்டரை ஆண்டு சாதனைகள் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்
மகளிர்,மாற்று திறனாளிகள் விடியல் பயண பேருந்து திட்டம், காலை உணவுத் திட்டம் மகளிர் சுய உதவிக் குழுக்களின் ரூ 2755.90 கோடி கடன் தள்ளுபடி,கொரோனா நிவாரண நிதி திட்டம், 1000 கோயில்கள் புளரமைக்கப்பட்டு குடமுழுக்கு, உழவர் நலன் தனி நிநிலை அறிக்கை என பல்வேறு சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரங்கள் மூலம் பிரச்சாரம் செய்தனர்.

நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *