தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழ வீராணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்
வட்டார தொடக்க கல்வி அலுவலர் லோகநாதன் அறிவுறுத்தலின்படிபள்ளியின் ஆண்டு விழா வெகு விமர்சியாக நடைபெற்றது .

பள்ளி தலைமை ஆசிரியர்சு .கோமதி தலைமை தாங்கினார் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன்,வீராணம் புல்லட் பூலியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் உதவி தலைமை ஆசிரியர் தனபால் வரவேற்று பேசினார்

பள்ளி ஆசிரியர் மணிமேகலை ஆண்டறிக்கை சமர்ப்பித்தார் கீழா வீராணம் ஊராட்சி மன்ற தலைவர் அ. வீரபாண்டியன் சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்டு பள்ளியில் பல்வேறு போட்டியில் கலந்து வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

இவ் விழாவில் பள்ளி மேலாண்மை குழு தலைவி திலகவதி முன்னாள் மேலாண்மை குழு தலைவர் சீதா லட்சுமி, ஆசிரியை அனிதா, சத்துணவு அமைப்பாளர் ஜெமிலா விஜயலட்சுமி,மற்றும் செல்லம்மாள் சமூக ஆர்வலர் ராமர், மற்றும் நீதிமன்ற பணியாளர் சண்முகையா, வேல்முருகன், சுசிலான்,
வினோத், ராமசந்திரன், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் மற்றும் மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழா முடிவில் மாணவ மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *