உலக மகளிர் தினத்தை முன்னிட்டு விமன் இந்தியா மூவ்மெண்ட் மதுரை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக மதுரை யானைக்கல்லில்
பெண்களின் வலிமை மற்றும் கண்ணியத்தின் கொண்டாட்டம்,என்ற தலைப்பில் பெண்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு விமன் இந்தியா மூவ்மெண்ட் வடக்கு மாவட்ட தலைவர் கதீஜா தலைமை வகித்தார்.
வடக்கு மாவட்ட செயலாளர் பாத்திமா வரவேற்புரையும், தெற்கு மாவட்ட செயலாளர் நிகார் நிகழ்ச்சி தொகுப்புரையும் வழங்கினார்.
மாநில மாவட்ட தொகுதி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர், வடக்கு மாவட்ட துணைத் தலைவர் ஜாபர் சுல்தான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
மிராகிள் சிறப்பு குழந்தைகள் பள்ளி ஆசிரியர் வசந்தி சிறப்பு அழைப்பாளராக வருகை தந்து சிறப்பித்தார்.

எஸ். டி. பி. ஐ. கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் நஜ்மா பேகம் சிறப்புரையாற்றினார்.
மேலும் புதுச்சேரி மாநிலத்தில் வன்புணர்வுக்குட்
படுத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமி ஆர்த்திக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இறுதியாக தெற்கு மாவட்ட தலைவர் நஸ்ரத் பேகம் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *