பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன்
பாபநாசம் அருகே நடைபெற்ற, நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில்..
500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பண்டாரவாடை நண்பர்கள் சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கீழப்பள்ளிவாசலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பள்ளியின் இமாம் மௌலவி அப்துல் காதர் ஜீலாணி ஃபைஜி சிறப்புரை வழங்கினார்.
இதில் உலக அமைதி மற்றும் ஒற்றுமைக்காக சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டது. நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பண்டாரவாடையை சுற்றியுள்ள ஜமாத்தார்கள், பொதுமக்கள், சமூகஆர்வலர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள், இமாம்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.