தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம்
புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த வாலிபர் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் ..
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் ஐயப்பன் வயது 36 இவர் எலக்ட்ரிஷன் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நேற்று இரவு 11 மணி அளவில் ஐயப்பன் திருப்பத்தூர் நகராட்சி சிவராஜ் பேட்டை பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடைப்பதாக திருப்பத்தூர் நகர போலிசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரஜினிக்குமார் மற்றும் போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஐயப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ஐயப்பனின் உறவினர்கள் திங்கட்கிழமை இன்று மாலை 4 மணி அளவில் ஐயப்பனின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் உள்ள திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திருப்பத்தூர் டிஎஸ்பி செந்தில் மற்றும் இன்ஸ்பெக்டர் ரஜினிக்குமார் நகர தனி பிரிவு காவலர் பிரபு ஆகியோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது போலிசார் அளித்த வாக்குறுதியை ஏற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர் . இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.