ராணிப்பேட்டை மாவட்டம் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ச வளர்மதி இஆப ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் அரக்கோணம் நாடாளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்கு சாவடி மையங்களில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்த உள்ள அனைத்து தேர்தல் பொருட்களும் வாக்குச்சாவடி மையம் வாரியாக தனித்தனியாக பிரித்து போடும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள் மாவட்ட வருவாய் அலுவலர் ந சுரேஷ் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஏகாம்பரம் வட்டாட்சியர்கள் அருள் அரசன் ஜெயக்குமார் கிராம நிர்வாக அலுவலர் ஞானவேல் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர் .