குடிபோதையில் போலீஸ் எஸ் ஐ.யை தாக்கிய விஏஓ

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே போதையில் நண்பர்களுடன் எஸ்ஐ யை தாக்கிய விஏஓ 5 பேரிடம் போலீசார் விசாரணை:

பரமத்திவேலூர், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் எஸ் ஐ யாக பணியாற்றி வருபவர் குமார் இவர் நேற்று மாலை சுண்டபனை பிரிவு அருகே டூ வீலர் வாகன விபத்தின் சேதமடைந்த இரண்டு வாகனங்களை எடுத்து வர மினி ஆட்டோவுடன் சென்றுள்ளார் திரும்பி வரும்பொழுது சுண்டப்பனை பிரிவு சாலை பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத அளவில் சாலையின் குறுக்கே அமர்ந்து 5 பேர் மது அருந்தியுள்ளனர். மினி ஆட்டோ அந்த பகுதியை கடக்க முடியாததால் அங்கிருந்தவர்களிடம் ஆட்டோ டிரைவர் பரத் குமார் ஆட்டோ செல்ல வழி விடுமாறு கூறியுள்ளார்.

குடிபோதையில் அங்கிருந்த நபர்கள் ஆட்டோவின் கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது. ஆட்டோவுக்கு பின்னால் டூவீலரில் வந்த எஸ்ஐ குமார் இதை தட்டி கேட்டபோது அவர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர். இதையடுத்து எஸ்ஐ குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் முகத்தில் காயம் அடைந்த அவர் பரமத்தி வேலூர் இன்ஸ்பெக்டர் ரங்கசாமிக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று இன்ஸ்பெக்டர் அங்கு குடிபோதையில் இருந்த 5 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்.

விசாரணையில் பொத்தனூரைச் சேர்ந்த இராமதேவம் விஏஓ சிவப்பிரகாசம்(41), பரமத்திவேலூரைச் சேர்ந்த லெனின்(27),அதே பகுதியைச் சேர்ந்த முகிலன்(26) பொத்தனூரைச் சேர்ந்த திலீபன்(32) பூபதி (30) என்பதும் தெரியவந்தது.

இது குறித்து தகவல் அறிந்த பரமத்திவேலூர் போலீஸ் டிஎஸ்பி சங்கீதா அவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். 5 பேரின் தாக்குதலால் காயமடைந்த எஸ்ஐ குமார் பரமத்தி வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பரமத்தி வேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *