கடலூர் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் டாக்டர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து
வேப்பூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பிரச்சாரம்

கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் டாக்டர்.விஷ்ணுபிரசாத் போட்டியிடுகிறார்

அவரை ஆதரித்து கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்டுரோட்டில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றதுகூட்டத்திற்குகடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் சி.வெ.கணேசன் தலைமை தாங்கினார்கடலூர் மேற்கு மாவட்ட விசிக செயலாளர் வீர, திராவிடமணி வரவேற்றார்

திமுக ஒன்றிய செயலாளர்கள் நல்லூர் பாவாடை கோவிந்தசாமி , மங்களூர் செங்குட்டுவன் , பட்டூர் அமிர்தலிங்கம், அடரி சின்னசாமி, திட்டக்குடி நகர செயலாளர் பரமகுரு விசிக மண்டல செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

கடலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து வாக்கு சேகரித்த விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பேசியது:

கடலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் டாக்டர் விஷ்ணு பிரசாத் காங்கிரஸ் கட்சியின் முன்னால் மாநில தலைவர் கிருஷ்ணசாமியின் மகன்
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணியின் மைத்துனர் அவரது அக்கா சௌமியா பாஜக கூட்டணியில் தர்மபுரியில் போட்டியிடுகிறார், நமது இந்தியா கூட்டணி சார்பில் தர்மபுரியில் செளமியாவை தோற்கடிக்க வேலை செய்ய வேண்டும், கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விஷ்ணு பிரசாத்தை ஜெயிக்க வைக்க வேலை செய்ய வேண்டும்.

விஷ்ணுபிரசாத் ஜனநாயக சிந்தனை கொண்ட முற்போக்கு சிந்தனையாளர் , அரசியல் அமைப்பை பாதுகாக்க அம்பேத்கர் கொள்கையை உள்வாங்கி கொண்ட ஒரு போராளியான விஷ்ணுபிரசாத்தை நாம் வெற்றி பெற வைக்க வேண்டும்.

பிஜேபி நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஆபத்தான கட்சி, பிஜேபி மத வெறியை, சாதி வெறியை, வன்முறையை தூண்டி விட்டு அதில் வெற்றி பெறிவார்கள் ஆனால் தமிழ்நாட்டில் அவர்களின் செயல்பாடு எடுபடாது தமிழ்நாட்டில் வாழும் மக்கள் மத நல்லிணக்கமாக. வாழ்ந்து வருகின்றனர்
அதுபோல் நமது கடலூர் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தும் சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட சமூக சிந்தனையாளர்

நம்முடைய முதலமைச்சர் அண்ணன் தளபதியாரும், ராகுல் காந்தியும் தேசிய அளவில் வியூகம் வகுத்து இந்தியா கூட்டணி அமைத்துள்ளனர்

இதில் 28 கட்சிகள் உள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இந்தியா கூட்டணியில் உள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ஐந்து சீட்டு கிடைக்கும் என்று ஆசை காட்டினார்கள் எனக்கு எண்ணிக்கை முக்கியமல்ல ஏற்றுக்கொண்ட கொள்கை தான் முக்கியம்.

இந்திய நாட்டை பாசிச பாஜக கும்பலிடம் இருந்து காப்பாற்ற இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும்,

தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பாடுபட வேண்டும்,

கடலூர் நாடாளுமன்ற வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும், அதுவும் விடுதலை சிறுத்தைகள் கடசியினர் செய்த வேலையால் விஷ்ணுபிரசாத் வெற்றி பெற்றதாக இருக்க வேண்டும் என பேசினார்

முடிவில் நல்லூர் ஒன்றிய விசிக செயலாளர் சந்தோஷ் நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *