தூத்துக்குடி மாவட்டம் கவர்ணகிரியில் சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் அவர்களின் 254வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருவுருவ சிலைக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.