சோழவந்தான்

சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றம் கழகத்தின் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் சோழவந்தானில் உள்ள தனியார் மீட்டிங் ஹாலில் நடந்தது இக்கூட்டத்திற்கு மதுரை வடக்கு மாவட்ட அமமுக செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார்.

மாநில நிர்வாகி தேர்போகி பாண்டி தொகுதி பொறுப்பாளர் மருத்துவர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர் திரவியம் வரவேற்றார்.இதைதொடர்ந்து ஏப்.19.ல் நடைபெறும் தேனி பாராளுமன்ற தொகுதி தேர்தலில் பூத் கமிட்டி நிர்வாகிகள் செயல் பாடுகள் மற்றும் களப்பணி குறித்து ஆலோசனை வழங்கப்பட்டு தேசிய முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டது.

மேலும் இக்கூட்டத்தில் வாடிப்பட்டி அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர்கள் ராஜன். கோடீஸ்வரன் மதன் மணவியர் அணி மாநில நிர்வாகி ஜீவிதா நாச்சியார்.மேலுர் ஆசை.மற்றும் பேரூர் ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *