க.தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம்
புதுப்பேட்டையில் திருப்பத்தூர் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி .
திருப்பத்தூர் பத்திரிகையாளர் சங்கம் மற்றும் நாட்றம்பள்ளி தாலுக்கா இருசக்கர வாகன பழுது பார்ப்போர் சங்கம் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி திருப்பத்தூர் பத்திரிகையாளர் சங்க தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. திருப்பத்தூர் பத்திரிகையாளர் சங்க செயலாளர் சரவணன், பொருளாளர் முனீர்பீரான், துணை செயலாளர் அலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதற்கு சிறப்பு அழைப்பாளராக நாட்டறம்பள்ளி காவல் நிலைய உதவி ஆய்வாளர் நந்தகுமார் கலந்து கொண்டு பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இப்பேரணி புதுப்பேட்டையில் இருந்து அக்ராகரம், ,கே.பந்தாரப்பள்ளி, வழியாக நாட்றம்பள்ளியில் முக்கிய வீதி வழியாக 10 கிலோமீட்டர் தொலைவிற்கு பேரணி நடைபெற்றது.
இதில் திருப்பத்தூர் பத்திரிகையாளர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் அஸ்ஸாம், அருண்குமார் நாட்டறம்பள்ளி இரண்டு சக்கர வாகன பழுது பார்ப்போர் சங்கத் தலைவர் சரவணன், செயலாளர் பூவேந்தர், பொருளாளர் இளங்கோ, மற்றும் சமூக ஆர்வலர் முருகன் உட்பட 50க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.
இதில் அனைத்து வாக்காளர்களும் தவறாமல் 100% வாக்குப்பதிவினை பதிவு செய்ய வேண்டும் என துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முடிவில் திருப்பத்தூர் பத்திரிகையாளர் சங்க செய்தி தொடர்பாளர் தினேஷ்குமார் நன்றி கூறினார்.