திருப்பூர் மாவட்டம் பல்லடம்,
அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த ஈச்சர் வேனில் பின்புறம் கார் மோதி விபத்து ஆறு பேர் படுகாயம்

விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணையால் பரபரப்பு திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் கவுதம் கவி குமரன் உள்ளிட்ட ஆறு பேர் கோவை சாலையிலிருந்து பல்லடம் நோக்கி வந்ததாக கூறப்படுகிறது

அப்போது காரணம்பேட்டை கோடாங்கி பாளையம் பகுதியை கடந்த முற்பட்டபோது எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த ஈச்சர் வேனில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது

இதனை அடுத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் அங்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியிருந்த ஆறு பேரை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பல்லடம் போலீஸ் சார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்

பல்லடம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த ஈச்சர் வேன் மீது கார் மோதிய விபத்தில் ஆறு பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *