சுரண்டை
திமுக மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்து தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது தென்காசி மக்களவைத் தொகுதியில் இந்திய கூட்டணியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆசியுடன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட டாக்டர் ராணி ஸ்ரீகுமார் வெற்றிக்காக தென்காசி தொகுதியில் பரப்புரை செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்க்கும், கழக துணை பொது செயலாளர் கனிமொழி எம்பிக்கும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கும், நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், இரவு,பகல் பாராது தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட மாவட்ட திமுக நிர்வாகிகள்,ஒன்றிய,நகர,பேரூர்,கிளைக் கழக நிர்வாகிகள்,அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.தொடர்ந்து திமுக நிர்வாகிகள் மக்கள் பணி செய்ய வேண்டும் இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.