தரங்கம்பாடி அருகே தேர்தல் அன்று ஆயப்பாடி தி.மு.க முகவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக புகார். மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து பொறையார் போலீசார் விசாரணை:

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி தேர்தலின் போது பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தரங்கம்பாடி தாலுக்கா ஆயப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடியில் திருக்களாச்சேரி மேலத்தெருவை சேர்ந்த சந்திரசேகர் (54) என்பவர் திமுக முகவராக பணியாற்றியுள்ளார்.

அப்போது அவர் திமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த அதிமுக வேட்பாளர் பாபுவின் தந்தையும் அக்கட்சியின் மாவட்ட செயலாளருமான பவுன்ராஜ் திமுகவுக்கு ஆதரவாக எப்படி வாக்கு சேகரிக்கலாம் எனக் கூறி சந்திரசேகரை சட்டையை பிடித்து அடித்ததுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக திமுக முகவர் சந்திரசேகர் பொறையார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தன்னை அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தாக்க முற்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டிருந்தார். புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார் அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் மீது 171(f), 352, 506(1) 132 ஆகிய நான்கு சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *