உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாக்கா லங்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் மீனாட்சி அம்மன், பிரியா விடை – சுந்தரேஸ்வரர் மதுரை மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். வீதி உலாவின் போது சிறுவர், சிறுமிகள் கடவுள் வேடமணிந்து கோலாட்டம் அடித்தபடி செல்வது பொதுமக்களை பரவசம் அடையச் செய்கிறது.

மீனாட்சி அம்மன் பட்டாபி ஷேகம், திக்கு விஜயம் போன்ற வைபவங்களை தொடர்ந்து 10-ம் திருநாளான நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. சித்திரை திருவிழாவின் மற்றொரு முத்தாய்ப்பு நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக 2 தேர்களும் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தன.

இன்று அதிகாலை 4 முதல் 4.30 மணிக்கு மீனாட்சி அம்மன்,பிரியாவிடை- சுந்தரேசுவரர்
ஆகியோர் முத்தம்பல முதலியார் கட்டளை மண்டகப்படி, ராமநாதபுரம் சேதுபதி மகா ராஜா மண்டகப்படிக்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

தொடர்ந்து ஒரே பல்லக்கில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை சுந்தரேஸ்வரர் கீழமாசி வீதியில் உள்ள தேரடிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு தீபாராதனைகள் நடத்தப்பட்டன.
அதன்பிறகு – சுந்தரேஸ்வரர் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். அப்போது பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பினர். தேரோட்டம் வதற்கு முன்பு கருப்பண தொடங்கு அங்குள்ள சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தொடர்ந்து பஞ்சவாத்தி யங்கள் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து தேரை காலை 5.15 இழுத் தனர். மணிக்கு மேல் 5.40 மணிக்குள் மேஷ ரதாரோஹணம் லக்கனத்தில் நடைபெற்று காலை 6.30 மணிக்கு முதலில் சுவாமி தேரையும், தொடர்ந்து
அம்மன் தேரையும் பக்தர்கள்
வடம் பிடித்து இழுத்தனர்.

தேரோட்டத்தில் லட்சக்
கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து சுவாமி -அம்மன் தேரை இழுத்துச் சென்றனர். 4 மாசி வீதிகளிலும் தேர்கள் அசைந்தாடி செல்வதை பொதுமக்கள் கள் சாலையின் இருபுறமும் உள்ள உயர்ந்த கட்டிடங்களில் நின்றும் தரிசனம் செய்தனர். தேருக்கு முன்பாக பக்தர்கள் மீனாட்சி – சுந்தரேசுவரர் பதிகம் பாடிச் சென்றனர்.

சுவாமி-அம்மன் தேருக்கு முன்பு அலங்கரிக்கப்பட்ட யானை அழைத்துச் செல்லப்பட்டது. அதன் பிறகு விநாயகர், முருகன், நாயன்மார்கள் தனித்தனி சிறிய சப்பரங்களில் சென்றனர். பகல் 11.30 மணியளவில் மாசி வீதி களை வலம் வந்த தேர்கள் நிலையை வந்தடைந்தன. அதன் பிறகு சண்டிகேஸ்வரர் வீதி உலா நடைபெற்றது.

தேரோட்ட விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றதை கருத்தில் கொண்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வெளி மாவட்டங்களில் களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற் கொண்டனர். திருவிழாவை காணவரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்து வதற்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.

மக்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய வசதியாக போக்கு வரத்தில் போலீசார் மாற்றங்கள் செய்து செயல் டுத்தினர்.
தேரோட்டத்தை தொடர்ந்து இன்று மாலையில் மீனாட்சி அம்மன். பிரியாவிடை- சுந்தரேஸ்வரர் சப்தாவர்ண சப்பரத்தில் மாசி வீதிகளை வலம் வருகின்றனர்.

நாளை (23-ந்தேதி) உச்சிக் காலத்தில் பொற்றாமரை குளத்தில் தீர்த்த திருவிழா நடக்கிறது. இரவு 10.15 மணிக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் 16 கால் மண்டபத்தில் இருந்து விடை பெற்றுச் செல்கின்றனர். இந்நிகழ்ச்சியோடு மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *