தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து கொண்டு இருப்பது கவலை அளிக்கின்றது…தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் பேட்டி….!
தூத்துக்குடி வாகை குளம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில்,
தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து கொண்டு இருப்பது கவலை அளிக்கின்றது. குறிப்பாக, ஒரு வாரத்தில் நான்கு மாவட்டங்களில் பல சம்பவங்கள் நடந்து இருப்பதை தொலைக்காட்சியிலும் பத்திரிக்கையிலும் பார்த்து வேதனையாக இருக்கின்றது…
போதை பொருள் நடமாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அரசாக செயல்பட தவறி இருக்கின்றது.. ஆக்கப்பூர்வமான பணியை முற்றுப்புள்ளி வைக்கின்ற பணியை செய்யவில்லை என்பது மாற்றுக் கருத்து கிடையாது.. அதன் காரணமாக சட்டம் ஒழுங்கு மேலும் தமிழகத்தில் சீர்கெட்டு கொண்டு இருக்கின்றது.. அரசு தயவு செய்து விழித்துக் கொள்ள வேண்டும்… இளைஞர்கள் தவறான பாதைக்கு சென்று கொண்டிருக்கின்றார்கள்..
மீண்டும் பள்ளி கல்லூரிகள் துவங்குவதற்கு முன் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்..
மேகதாது அணை குறித்து சர்வ சாதாரணமாக அறிக்கை கர்நாடக மாநிலத்தின் முதல்வரும், துணை முதல்வரும் வெளிப்படையாக பேசுவது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகும்.. தமிழகத்தில் மேகதாது அணை கட்டினால் இங்கு டெல்டா பகுதியில் பாலைவனம் ஆகிவிடும் என்பதில் மாற்று கருத்து கிடையாது..
விவசாய பெருங்குடி மக்களுக்கு இது பயிர் பிரச்சனை மட்டுமல்ல, உயிர் பிரச்சனை, திமுக ஆட்சியாளர்கள் எந்தவிதமான ஒரு ஆக்ரோஷமான பதிலையும் நம்முடைய விவசாய பெருங்குடி மக்களுக்காக ஒலிக்கவில்லை என்றால் நிச்சயமாக கூட்டணி அரசியல் வாக்கு வாங்கிக்காக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் வருத்தமான செய்தி… விவசாயிகள் பக்கம் ஆளுகின்ற ஆட்சியாளர்கள் இல்லை என்பதை எடுத்துக்காட்டாக அமைந்து இருக்கின்றது..
தமிழகத்தை எடுத்துக் கொண்டால் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வாய்ப்பு பல இடங்களில் அதிகரித்து கொண்டுள்ளது.. மேலும் எங்களுடைய சதவீதம் எதிர்பார்ப்புக்கு மேல் தாண்டும் என்ற நம்பிக்கை உள்ளது.. தூத்துக்குடி தொகுதியில் எதிர்மறை வாக்கு எங்களுடைய வெற்றிக்கு காரணமாக இருக்கும் என்பதை முழுமையாக நம்புகின்றேன் என்றார்.