வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.
திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையம் மற்றும் சட்டத்தின் பார்வை தமிழ் மாத நாளிதழ் இணைந்து தண்ணீர் பந்தல் திறப்பு.
திண்டுக்கல்லில் நாளுக்கு நாள் வெயில் உச்சத்தை எட்டி வருகிறது. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உஷ்ணம் தாளாமல் பெரும் அவதிபடுகின்றனர். தாகத்தை தீர்ப்பதற்க்காக இங்கும், அங்கும் அலையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையம் மற்றும் சட்டத்தின் பார்வை தமிழ் மாத இதழ் இணைந்து இன்று திண்டுக்கல் ரவுண்டு ரோடு பகுதியில் தண்ணீர் பந்தல் அமைத்துள்ளனர்.
இந்த தண்ணீர் பந்தல் துவங்கும் நிகழ்வில் இன்று பொது மக்களுக்கு தண்ணீர் பழம், நீர்மோர், குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டது.