பெரம்பலூரில் அ தி மு க கழக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி.கே. பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க பெரம்பலூர் நகர கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கோடைகால நீர், மோர் பந்தலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் இளம்பை.இரா. தமிழ்செல்வன் மற்றும் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வரகூர். அருணாச்சலம் ஆகியோர் கலந்துகொண்டு திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வில் சிதம்பரம் நாடாளுமன்ற வேட்பாளர் சந்திரகாசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மருதராஜா, சந்திரகாசி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூவை.செழியன், நகர கழக செயலாளர் ராஜபூபதி மற்றும் மாவட்ட , ஒன்றிய, நகர,பேரூர் கழக பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.