வாடிப்பட்டியில் அதிமுக சார்பில் பொது மக்கள் தாகம் தீர்க்க நீர் மோர் பந்தல் திறப்பு.
வாடிப்பட்டி
வாடிப்பட்டியில் அதிமுக ஒன்றிய மற்றும் பேரூர் சார்பில் அதிமுக பொது செயலாளர் பழனிசாமி ஆணைங்கிணங்க கோடைகால வெயில் தாக்கத்தினால் ஏற்படும் பொதுமக்கள் தாகம் தணிக்க. பேரூந்து நிலையம் முன்பு மற்றும் சந்தை கேட் எதிரே உள்ளிட்ட இடங்களில் நீர், மோர் பந்தலை மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சர் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் R.B.உதயகுமார் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் மகேந்திரன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் கருப்பையா மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் ராஜேஸ் கண்ணா மாவட்ட நிர்வாகிகள் துரை தன்ராஜ், மகளிரணி லட்சுமி, அவைத் தலைவர் மு.சி சோ. முருகன், வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் காளிதாஸ், பேரூர் செயலாளர் டாக்டர் அசோக்குமார் துணைச் செயலாளர் சந்தனத்துரை, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ராமசாமி, ஆலயமணி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் மணிமாறன், கோட்டை மேடு பாலன், நாகமணி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மகளிரணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதே போல் சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோவில் முன்பு அதிமுக சார்பில் அமைக்கப்பட் நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் திறந்து வைத்தார்.இதில் மாவட்ட ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.