வலங்கைமான்கீழத்தெரு பொன்னியம்மன் என்கிற பிடாரி அம்மன்ஆலயதேர் திருவிழா நடைபெற்றது. இதில் திரளானபக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கீழத்தெருவில் பொன்னியம்மன் என்கிற பிடாரியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் வருடம் தோறும் சித்திரை மாதம் தேரோட்டம் நடைபெறுவது வழக்கமான ஒன்று. இவ்வாண்டு கடந்த 16-ம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்த்தியுடன்தொடங்கி, தினசரி பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா காட்சி நடைபெற்றது.
விழாவில் நேற்று முன்தினம் (23-ம் தேதி) பொன்னியம்மன் என்கிற பிடாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி வீதி உலா காட்சி நடைபெற்றது. நேற்று (24 -ம் தேதி) இரண்டாவது நாளாக தேர் திருவிழா நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று( 25 -ம் தேதி) மதியம் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், விடையாற்று விழாவும் நடைபெற்றது.
தேர் திருவிழா ஏற்பாடுகளை கீழத் தெருவாசிகள், எல்லையம்மன் கோவில் தெருவாசிகள், உப்புக்காரதெருவாசிகள் பாய்க்கார தெருவாசிகள் உள்ளிட்ட மற்றும் நகரவாசிகள் சிறப்பாக செய்திருந்தனர்.