ஏரல் பேரூராட்சியில் குப்பை கொட்டும் போராட்டம் நடைபெறும்

தூத்துக்குடி மாவட்டம் சிறுவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏரல் பேரூராட்சி உள்ளது இந்த பேரூராட்சிக்குட்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரையோரம் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரித்து வருவதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை குப்பை எரிக்கப்படும் இடம் அரிகிலேயே மக்கும் குப்பை மக்காத குப்பை இடம் செயல்பட்டு வருகிறது

அங்கு அதனை பயன்படுத்தாமல் குப்பைகளை எரித்து வருகின்றது அதுபோல இறைச்சி கழிவுகளை தாமிரபரணி ஆற்றில் கொட்டுவதால் தாமிரபரணி நீர் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது இதனை கண்டித்து மே மாதம் இருபதாம் தேதி ஏரல் பேரூராட்சி அலுவலகத்தில் குப்பை கொட்டும் போராட்டம் நடைபெறும் என்று தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *