செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.
பெண்கள் கற்றுக் கொள்ள கூடிய தற்காப்பு கலையே கராத்தே…!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் நடைபெற்று வரும் மாணவர்களுக்கான கோடைக்கால இலவச பயிற்சி வகுப்பில் நேற்று தற்காப்பு கலையான கராத்தே பயிற்சி வழங்கப்பட்டது. இதில் பயிற்சியாளர் நித்யானந்தம் மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி பற்றிய அடிப்படை விதிகளை விளக்கினார். மேலும் பெண்களுக்கு மிகவும் அவசியமானது கராத்தே பயிற்சி என்று வலியுறுத்தினார். இந்த நிகழ்வில் கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன், ஓவிய ஆசிரியர் பெ. பார்த்திபன், ஸ்போக்கன் இங்கிலீஷ் ஆசிரியர் சதானந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.