ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக மறைந்த காங்கிரஸ் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா அவர்களின் நினைவு நீர் மோர் வழங்கும் விழா.!
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக நீர் மோர் வழங்கும் விழா மறைந்த திருமகன் ஈவெரா எம்எல்ஏ அவர்களின் நினைவாக ஈரோடு பேருந்து நிலையம் நுழைவு வாயிலில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் டி திருச்செல்வம் தலைமையில் மாவட்டத் துணைத் தலைவர் பா ராஜேஷ் ராஜப்பா, மாவட்ட செயலாளர் மாமரத்து பாளையம் கோபி ஆகியோர் முன்னிலையில் திமுக கோட்டை பகுதி செயலாளர் பொ ராமச்சந்திரன் கலந்து கொண்டு நீர்மோர் மக்களுக்கு வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் 35 வது வார்டு கவுன்சிலர் புவனேஸ்வரி பாலசுந்தரம்,35 வது வார்டு செயலாளர் பிரகாஷ்,தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் எம். ஜவஹர் அலி, துணைத்தலைவர் பாஸ்கர்ராஜ்,பொது செயலாளர் எ. வின்சென்ட்,மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி கே ஜே டிட்டோ, நெசவாளர் அணி மாவட்ட தலைவர் சி மாரிமுத்து, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைத்துறை துணைத் தலைவர் கே என் பாஷா, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் எம்.ஜூபைர் அகமது,ஓ பி சி பிரிவு மாவட்ட தலைவர் சூரியா சித்திக்,மஞ்சள் மண்டி ராஜகோபால், வள்ளிபுரத்தாம்பாளையம் எஸ் தங்கவேலு,கேமரா செல்வம், சூரம்பட்டி வார்டு தலைவர் விஜயகுமார், ராஜாஜிபுரம் குமரேசன், கார்த்திகேயன், திமுக நிர்வாகி பாலசுந்தரம் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டு பேருந்து நிலையத்திற்கு வந்த பயணிகள் அனைவருக்கும் நீர் மோர் வழங்கினார்கள்.