ரவுடிகளின் வேட்டையை தொடர்ந்து குட்கா வேட்டையில் ஈடுபட்ட செங்குன்றம் துணை ஆணையர்
செங்குன்றம் செய்தியாளர்
சென்னை மாத்தூர் பகுதிகளில் குட்கா வேட்டையில் ஈடுபட்ட துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் மணலி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன்
மற்றும் பத்திற்கும் மேற்பட்ட போலீசார் உள்ளிட்ட பகுதிகளில் கடைகளில் சென்று ஆய்வு செய்ததில் 500 கிராம் குட்கா மற்றும் ஹான்ஸ் போன்ற போதை பொருட்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார்
பின்னர் மணலி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் மாத்தூர் மற்றும் மணலி உள்ளிட்ட பகுதிகளில் கடைகளில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்பதை தீவிரமாக சோதனைக்கு ஈடுபட உத்தரவிட்டார்
இதனைத் தொடர்ந்து செங்குன்றம் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 18 குழுக்களாக போலீசார் அமைத்து குட்கா வேட்டையில் தொடர்ந்து மூன்று நாட்களாக ஈடுபட இருப்பதாகவும் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். .