திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி எக்ஸ்னோரா கிளை சார்பில் இயக்குநர் சு.தனசேகரன் அவர்களின் தந்தை என்.சுப்பிரமணியன் அவர்களின் 11 ஆம் ஆண்டு நினைவாக பிருதூர் புனித வளனார் முதியோர் இல்லத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர் சாதிக் தலைமை தாங்கினார். எக்ஸ்னோரா துணை தலைவர்கள் பா. சீனிவாசன், மு. பிரபாகரன், எக்ஸ்னோரா இயக்குநர் க.வாசு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ம. ரகுபாரதி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக வழூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஆனந்தன் பங்கேற்று முதியோர் பாதுகாப்பு முறைமைகள் பற்றிய விழிப்புணர்வு தகவல்களை வழங்கினார்.

மேலும் முதியவர்கள் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும், வெயிலில் அதிக நேரம் வரக் கூடாது என்றும் அறிவுறுத்தினார். இந்த நிகழ்வில் எக்ஸ்னோரா சங்க நிர்வாகிகள் வந்தை குமரன், இரா.அருள் ஜோதி, மனோஜ் குமார், அ.ஷாகுல் அமீது, வட்டார மருத்துவ ஆய்வாளர் சீதாபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதியோர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. இறுதியில் பொருளாளர் வி.எல். ராஜன் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *