வலங்கைமான் கள்ளத்தெரு ஸ்ரீபொய்யா மூர்த்தி விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கள்ளத்தெரு ஸ்ரீ பொய்யா மூர்த்தி விநாயகர் ஆலயத்தில், வலங்கைமான் எம். கே. என். வீரப்ப முதலியார் குடும்பத்தினர்களால், கடந்த 23-ம் தேதி மாலை 7- மணிக்கு ஸ்ரீ பொய்யா மூர்த்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
24 ஆம் தேதி காலை 9- மணிக்கு எஜமானர் சங்கல்பம், கணபதி ஓமம், நவக்கிரக ஹோமம் நடைபெற்று, காலை 11 மணிக்கு தீபாராதனை நடைபெற்று அனைவருக்கும் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.
மாலை 6-30 மணிக்கு வாஸ்து சாந்தி, மிஸ்சங் கிரகணம் நடைபெற்றது. மாலை 6- மணிக்கு விநாயகர் வழிபாடு, ஆச்சாரியாரிஷா பந்தணம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், யாகசாலை பூஜைகள் காலம் -1, தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. 26 -ம் தேதி காலை 6.30 மணிக்கு விநாயகர் வழிபாடு, கோ பூஜை, யாகசாலை பூஜைகள், காலை 9 .15 மணிக்கு யாகசாலை பூஜைகள் காலம்-2, யாத்ரா தானம், கடம் புறப்பாடு, 9.45 மணிக்கு விமான கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலை 10.15 மணிக்கு ஸ்ரீ பொய்யா மூர்த்தி விநாயகர் கும்பாபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்று அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 7- மணி அளவில் மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. யாகசாலை பூஜைகளை திப்பிராஜபுரம் சிவகாம சுடர்மணி ஜி. எம். மணிகண்டன் சிவாச்சாரியார், ஆலய அர்ச்சகர்விருப்பாச்சிபுரம் ஏ.குமார் குருக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை வலங்கைமான் எம்.கே. என்.வி. குமாரசாமி முதலியார் சகோதரர்கள் மிக சிறப்பாக செய்திருந்தனர்.