இயற்கைவாழ்வியல் அறிஞர் நம்மாழ்வார் , 9ஆம்ஆண்டு நினைவேந்தல் இயற்கைவாழ்வியல் அறிஞர், நம்மாழ்வார் அவர்களின்,9- ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, தஞ்சை பெசன்ட் அரங்கில் நேற்றைய தினம் மாலை 6 மணி அளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்கள், நிர்வாக அறங்காவலர் மற்றும் செயலர், பாரதிதாசன் தலைமை தாங்கினார், அகில இந்திய மக்கள் சேவை இயக்க தமிழ்நாடு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழு,
நிறுவனர் மற்றும் தலைவர்,மருத்துவர், தங்க. சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்த் தேசிய முன்னணி மாநில பொதுச் செயலாளர் அய்யனாபுரம் முருகேசன் அம்மா மக்கள் முன்னேற்ற கழக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் நல்லத்துரை, தமிழ் தேசிய பேரியக்க மாவட்ட செயலாளர் நா.வைகறை, மதிமுக மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன் , தமிழ் தேச தன்னுரிமை கட்சி பொதுச் செயலாளர், கீ.நா. பனசை அரங்கன், பேரழிப்புஎதிரான பேரியக்கம் பொருளாளர்,கோ. சதாசிவம், பேரழிப்புக்கு எதிரான பேரியக்க,ஆர்.ஜி. இரத்தினகுமார் காரியாமங்கலம் அப்துல்லா இராவுத்தர் பண்ணை,எம்.ஏ.எஸ். முகமது ரபீக்,எம்.ஏ. எஸ்.ஷாஜகான், இளைஞர் அணி தலைவர்,பிரசன்னா, சரபோஜி கல்லூரி பேராசிரியர், வி.பாரி,து. வாசுதேவன்,துரை. மதிவாணன்,பி. சீனிவாசன்,எம்.ஆர். ரவி, காவிரி தாய் இயற்கை வழி வேதான் உழவர் நடுவம் அறங்காவலர், அரு. சீர்.தங்கராசு, டாக்டர். டி.சம்பத், டாக்டர். ரமேஷ் குமார், ஸ்ரீதர், டாக்டர்.பிரகாஷ், ரோட்டரி சங்க மண்டல தலைவர், .சிவக்குமார், டாக்டர். கார்த்திகேயன், இயற்கையின் தலைவன் பன்மையத் தானிய உணவகம்,.மோகன்,டாக்டர். கலைமகன் ரவி, பண்டிதர்.ஸ்டீபன் சந்திரசேகர் கொங்கன் சித்தர் மருத்துவ நிறுவனர்,டாக்டர். போஸ் பிரியன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் நிகழ்ச்சியின் நிறைவாக, நம்மாழ்வார் வாழ்வாதார பாதுகாப்பு இயக்க பொதுச் செயலாளர், விக்னேஷ் நன்றி கூறினார்.