நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம், ஆலம்பாளையம் பேரூராட்சி அன்னை சத்யா நகர் பேருந்து நிறுத்த பகுதி அருகே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அன்னை சத்யா நகர் கிளை சார்பில், பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி கிளை செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார்.. அன்னை சத்யா நகர் பகுதியில் உள்ள ஆலாம்பாளையம் பேரூராட்சி சமுதாயக் கூட்டத்தை பராமரிப்பு செய்து, மக்கள் பயன்பாட்டுக்கு விடக் கோரியும், அன்னை சத்யா நகர் அடுக்குமாடு குடியிருப்பில், உள்ள செப்டிக் டேங்க் பைப் லைன், அனைத்தும் சரி செய்ய கோரியும், ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது.. இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் கவுன்சிலர்கள் ராஜா, ராணி,கட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் முத்துக்குமார், கட்சி மாவட்ட குழு உறுப்பினர் கோவிந்தராஜ், மற்றும் கட்சி ஒன்றிய செயலாளர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..