செங்கல்பட்டில் செங்கை புத்தக திருவிழா கண்காட்சி நடைபெற்று வருகிறது, ஒவ்வொரு நாளும் அரசு பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவ மாணவியர் பொது மக்கள் என பலர் பங்கேற்று தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்,
மாணவர்களிடையே வாசித்தல் திறனை அதிகரிக்க ஆசிரிய பெருமக்கள் புத்தகங்களை படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வாயலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் செங்கை புத்தக திருவிழா கண்காட்சியை பார்வையிட்டனர் பொறுப்பு தலைமை ஆசிரியர் அர்ஷத் மற்றும் தமிழ் ஆசிரியை கீதாலட்சுமி ஆகியோர் மாணவர்களை புத்தகத்திருவிழாவிற்கு அழைத்து வந்திருந்தனர். வாசிப்பை நேசிக்கும் விதமாக அனைத்து மாணவர்களும் புத்தகங்களை ஆர்வமுடன் வாங்கி சென்றது குறிப்பிடத்தக்கது.