சிங்கப்பூரில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்ப போட்டியில் மாணவர்கள் சாதனைபடைத்த மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்பப் போட்டியில் திருச்செந்தூர் ஆலன் திலக் கராத்தே மற்றும் சிலம்ப பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கங்களை வென்றனர்.
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்ப போட்டியில் பல்வேறு நாடுகளில் கலந்து கொண்டனர். இந்தப்போட்டியில் திருச்செந்தூர் ஆலன்திலக் கராத்தே மற்றும் சிலம்பபள்ளி மாணவர்கள் மதுமிதா இரட்டை கொம்பு சுற்றில் தங்கப்பதக்கமும் சிவக்குமார் ஒற்றை கொம்பு சுற்றில் தங்கப்பதக்கமும் வென்றனர். பயிற்சி அளித்த ஆலன் திலக் கராத்தே மற்றும் சிலம்ப பள்ளி மாஸ்டர் கராத்தே டென்னிசன் மற்றும் மாணவர்களை திருச்செந்தூர் இரயில்வே நிலையத்தில் பொதுமக்கள் வரவேற்றனர்.