பாத்வே தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு சி.எஸ்.ஆர். விருது.
மதுராந்தகம் அடுத்த அக்கினி கிராமத்தில் டாக்டர் தத்துவராவ் மெமோரியல் சாரிடபிள் டிரஸ்ட் பாத்வே என்ற தொண்டு நிறுவனம் சமுதாயத்திற்கு ஆற்றி வரும் பணிகளை பாராட்டி புது டெல்லி பிராண்ட் ஹான்ச்சோஸ் நிறுவனத்தினர் இந்தியாவின் சிறந்த தொண்டு நிறுவனம் 2022-2023 ஆண்டிற்கான சி.எஸ்.ஆர் என்ற விருதினை அண்மையில் வழங்கி கௌரவித்தனர்.
அகிலி கிராமத்தில் டாக்டர் தத்துவராவ் மெமோரியல் சாரிட்டபிள் டிரஸ்ட் பாத்வே என்ற தொண்டு நிறுவனத்தினர் ஆதரவற்ற குழந்தைகள், மண வளர்ச்சி குன்றிய குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள், உள்ளிட்டவர்களுக்கு கல்வி வசதி உணவு உறைவிட வசதி மற்றும் ஏழை எளியவர்களுக்கு இலவசம் மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட சமூகப் பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கி பயன் பெற்று வருகின்றனர். இத்தகைய நிலையில் அவர்களின் சேவை பணிகளை அறிந்த பிராண்ட் ஹான்ஸ் ஷோஸ் நிறுவனத்தினர் பல்வேறு பணிகளை கண்டறிந்து தென்னிந்தியாவிற்கான 2022-2023 சிஎஸ்ஆர் விருதினை வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர். மேலும் புதுடில்லி அன்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டாக்டர் தத்துவராவ் மெமோரியல் சாரிடபிள் டிரஸ்ட் பாத்வே நிறுவனத்தின் சார்பாக இணை இயக்குனர் மருத்துவர் சந்திரா பிரசாத்துக்கு புதுடெல்லி பிராண்ட் ஹான்ஸ் ஷோஸ் நிறுவன மேலாண்மை இயக்குனர்ரோஹன்மதன் மற்றும் இயக்குனர் ரிஷிசர்மா ஆகியோர் சிறந்த சிஎஸ்ஆர் விருதினை வழங்கி பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.