சென்னை மாநகராட்சி மாதவரம் 3வது மண்டலத்திற்கு லட்சுமிபுரம் பொன்னியம்மன் மேடு தணிகாசலம் நகர் ரெட்டேரி மாதவரத்தில் பல்வேறு பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட தனியா நிறுவன தொலைபேசி உயர் கோபுரம் அமைக்கப்பட்டு அதற்குண்டான மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கி நிலுவை உள்ளது இதனை வருவாய் அலுவலர் மற்றும் வரி மதிப்பீட்டாளர் வரி ஆய்வாளர்கள் பலமுறை நேரில் சென்று வரி செலுத்த அறிவுறுத்தியும் நோட்டீஸ் வழங்கி வரி செலுத்தாமல் உள்ள தனியார் தொலைபேசி உயர் கோபுர கட்டிடங்களுக்கு உள்ள மின் இணைப்பை மாநகராட்சி மின்வாரிய ஊழியர்கள் மூலம் மின் இணைப்பு துண்டித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் தனியார் தொலைபேசி கோபுரங்கள் வரி செலுத்தாமல் சுமார் 1 கோடி 50 லட்சம் நிலுவை உள்ளது இதனை உடனடியாக வசூல் செய்ய மாநகராட்சி மாதவரம் 3வது மண்டல உதவி வருவாய் அதிகாரி சூரிய பானு வரி மதிப்பீட்டாளர்கள் திருநாவுக்கரசு முகமது கலிமுல்லா அன்புமணி மற்றும் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் இந்த அதிரடி நடவடிக்கை சென்னை மாநகராட்சி உள்ள 200 வார்டுகளிலும் இந்த நடவடிக்கை தொடரும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர் மின் இணைப்பு துண்டிக்கும் நடவடிக்கையால் அந்தந்த கோபுரங்களில் உள்ள தொலைபேசி சிக்னல்கள் செயலிழக்கும் அபாயம் உள்ளது இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிகிறது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *