பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் பொதுவிருந்து நடைபெற்றது
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது.
பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள முக்கிய திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்தப்படுகிறது.
அந்த வகையில் இத்திருக்கோயிலிலும் பொது விருந்து நடத்தப்பட்டது திருப்பெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் SD.கருணாநிதி, திருக்கோயில் செயல் அலுவலர். செந்தில்குமார், திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில் தேவராஜ்,வல்லக்கோட்டை குமார், விஜயகுமார்,முருகன்,திருக்கோயில் நிர்வாகத்தினர்,திமுக நிர்வாகிகள், பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்து பொது விருந்தில் கலந்துகொண்டனர்.
சுமார் 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பொதுவிருந்தில் பங்கேற்றனர்.